--> -->

இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

பெப்ரவரி 19, 2021

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷநேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பெயர்ப்பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சாக இருந்த இந்த இராஜாங்க அமைச்சு, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அவை - தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு எனவும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு என பிரிக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ராஜபக்ஷவே, அவை பிரிக்கப்பட முன்னரும் மேற்குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சின் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.