--> -->

பிரித்தானிய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

ஏப்ரல் 03, 2019

பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு செவ்வாய் கிழமையன்று (ஏப்ரல், 02) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

133 மீட்டர் நீளமான எச்எம்எஸ் "மொன்ட்ரோஸ்" கப்பலில் 215 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. புதன்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.