--> -->

கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து விமானப்படை மற்றும் கடற்படையின் முயற்சியினால் முறியடிப்பு

மே 22, 2021

இலங்கை கடற்படை , இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை  தலைமையிலான கூட்டு தீயணைப்பு நடவடிக்கையால் 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தணிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ ஏற்பட்டதை தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு அமைய  தீயணைப்பு நடவடிக்கைகள். முன்னெடுக்கப்பட்டது.