--> -->

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஜூன் 03, 2021

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (ஜூன் 3) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பிரதேசங்கள் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .