--> -->

இடைநிலை பராமரிப்பு நிலையமாக வகையில் மாநாட்டு மண்டபம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

ஜூன் 22, 2021

கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை கொவிட்- 19 தொற்றாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினர் மாற்றியமைத்து  அதனை சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர்.

அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான சுமார் 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் சகல மருந்துவ வசதிகளுடன் கூடிய ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் அறிவுறுத்தலுக்கமைய, 14 வது படைப்பிரிவின் படைவீரர்கள் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தங்களது பங்களிப்பனை வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.