--> -->

பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது

செப்டம்பர் 16, 2021

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது தனமல்வில, பலஹருவ பிரதேசத்தில் சூட்சமமான முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கமைய, மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 20வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் செய்கைபண்ணப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சட்டவிரோத கஞ்சா செய்கை அரை ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டு இருந்ததாகவும் அவற்றின் சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா எனவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு செய்கை பண்ணப்பட்டிருந்த கஞ்சா செய்கை பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் படையினரால் அழிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.