--> -->

ஆகஸ்ட் 08, 2019

வருடாந்த பூஜை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக முழங்காவில் மாதா தேவாலயத்தை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டு கிளிநொச்சியை வந்தடைந்த யாத்திரிகள் குழுவினரை கிளிநொச்சி பாதுகாப்பு படையினர் வரவேற்றனர். மடு மாதா புனித தேவாலயத்திற்குச் செல்வதற்கு முன்பாக முலாங்கவில் பூஜை நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் இம்மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் யாத்ரிகர்கள் குழு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புனித மடு மாதா தேவாலயத்திற்கு செல்லும் பல்லியாற்று பகுதியில் பக்தர்கள் புத்துணர்ச்சி பெற்றுக்கொள்ளும் வகையில் உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.