--> -->

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராணுவம் உதவி

ஜூன் 03, 2022

நாட்டின் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் இலங்கை இராணுவத்தின் 12 வது பொறியியல் படை துருப்புக்கள் துரித நடவடிக்கை எடுத்தனர்.
 
இலங்கை இராணுவ ஊடகங்களின்படி, பியகம பகுதியில் உள்ள இலங்கை இலகு காலாட்படை (SLLI) துருப்புக்கள் யடவத்தை, மடியா மற்றும் கெமுனு மாவத்தை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கினர். வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் உடைந்த மரக்கிளைகளை சாலைகளில் இருந்து படையினர் அகற்றினர்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளுக்கு பதிலளிப்பதற்காக இராணுவ துருப்புக்கள் அரச நிறுவனங்கள், பொலிசார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.