--> -->

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவி

ஜூலை 04, 2022

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு வகையான வாழை, மரக்கறி மற்றும் நெற் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இலங்கை இராணுவத்தின் (SLA) வடக்கைத் தளமாகக் கொண்ட துருப்புக்கள் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமது பங்களிப்பை செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் தலைமையக வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பல வகையான வாழைகளை நட்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேசமயம் நாட்டின் பிரதான உணவான அரிசியை பயிரிடுவதற்கான முயற்சியும் தமது பண்ணைகளில் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.