--> -->

வடினாகலை பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தினர் உதவி

ஜூலை 12, 2022

அண்மையில் வடினாகலை  மலைத் தொடரின் ஒரு பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அங்கு விரைந்த இராணுவ படையினர் உடனடி நடவடிக்கை எடுத்ததாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் 121 படைப்பிரிவு படையினர் தீயை காட்டுப்பகுதிக்குள் கொண்டுவந்து அதனை மேலும் பரவ விடாமல்  தடுக்க நடவடிக்கை எடுத்தாக குறிப்பிடப்படுகிறது.