--> -->

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை க்கு மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள இராணுவம் உதவி

ஜூலை 15, 2022

ஹம்பாந்தோட்டை பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தின் உதவியுடன் அம்பாந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அண்மையில் கிடைக்கப்பெற்றன.

மத்திய பாதுகாப்புப்படைத் தலைமையகத்தின் 12வது பிரிவு தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பிமா நிறுவனம் (PIMA UAE) மற்றும் அங்கு வதியும் இலங்கை சமூகத்தினரும் இணைந்து இந்நன்கொடையை வழங்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

12 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, வைத்தியசாலை வளாகத்தில் வைத்து அதன் பணிப்பாளர் வைத்தியர் சுரங்க பஸ்நாயக்கவிடம், கிடைக்கப்பெற்ற மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.