--> -->

வத்தலையில் ஏட்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவி

ஜூலை 17, 2022

வத்தளை, ஹுனுப்பிட்டியில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் களஞ்சியமொன்றில் நேற்று மாலை (ஜூலை 16) ஏற்பட்ட  தீயை  இலங்கை கடற்படை தீயணைப்பு குழுவினர் அணைத்துள்ளனர்.

கடற்படை தீயணைப்பு வீரர்கள் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை முற்றாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்ததாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.