--> -->

மற்றொரு கஞ்சா கடத்தல் முயற்சி இலங்கை கடற்படையினால் முறியடிப்பு

ஜூலை 20, 2022

யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசுரினா கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதியில் நேற்று (ஜூலை 19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 
சுமார் 575 கிலோ 600 கிராம் எடையுடைய 17 பொதிகளில் பொதி செய்யப்பட்ட கஞ்சா சந்தேகத்திற்கிடமான படகொன்றிலிருந்து சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி சுமார் 172 மில்லியன் ரூபா எனவும், சந்தேகநபர்கள் 42 மற்றும் 51 வயதுடைய யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, படகு மற்றும் இரு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.