--> -->

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்

ஜூலை 29, 2022

தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 29). இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த உயர் ஸ்தானிகரை ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.

இரு உயர் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற சுமூகமான சந்திப்பின் போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் ஊழியர்களுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக உயர் ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் பாராட்டினார்.

இந்ந சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் நினைவுச் சின்னம் வழங்கினார்.