--> -->

பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

ஒக்டோபர் 28, 2022

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 28) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

பொப்பி மலர் தினம் என அறியப்படும் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வானது, முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வை மையப்படுத்தி சேகரிக்கப்படும் நிதியானது படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும்.

இந்நிகழ்வில், மேற்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் (ஓய்வு) பி.கே.சி. சாந்திலால் கங்காணம்கே, பொப்பி மலர் ஞாபகார்த்த குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ருவன் வணிகசூரிய, திரு.ஹெட்டியாராச்சி, திருமதி ராஜபக்ஷ மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.